மின்சார சபையில் ஒரு தரப்பினர் மாபியாவாக செயற்படுகிறார்கள் - சம்பிக்க

Published By: Digital Desk 2

07 Dec, 2022 | 09:31 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை மின்சார சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை 18 கம்பனிகளுக்கும் நிறுவனங்களுக்கும் ஒட்டுமொத்தமாக 22 ஆக  வகைப்படுத்தி நிறுவனமயமாக்க இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்த பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆகவே அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (டிச.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மின்சார சபையின்முறையற்ற செயற்பாடுகளினாலும்,மின்சார சபை சங்கங்களின் தொழிற்சங்க போராட்டங்களினாலும் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளது என சமூகத்தின்மத்தியில் காணப்படும் நிலைப்பாடு உண்மையானதே, மின்சார சபையில் ஒரு தரப்பினர் மாபியாவாக செயற்படுகிறார்கள்.

இலங்கை மின்சார சபையை நிறுவனமயமாக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இலங்கை மின்சார சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை 18 கம்பனிகளுக்கும் 4 நிறுவனங்களுக்கும் ஒட்டுமொத்தமாக 22 நிறுவனங்களாக வகைப்படுத்த இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

2002 ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபையின் சேவை கட்டமைப்பு 6ஆக வகைப்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக்கொண்டு இலங்கை மின்சார சபையை முழுமையாக் கலைப்பதற்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபையின்மின்னுற்பத்தி பொறுப்பபை லக்ஷபான மின்னுற்பத்தி நிலையம், மகாவலி நீர்மின் வளாகத்திற்கும் சமனலவாவி மின்நிலையத்திற்கும் புத்தளம்மின்நிலையத்திற்கும் களனி திஸ்ஸ. சபுகஸ்கந்த ஆகிய மின் நிலையங்களுக்கும் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் உரிமத்தை திறைசேரிக்கு தற்காலிகமாக வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீர் மின்னுற்பத்தியை நிறுவனமயமாக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். லக்ஷபான நீர் மின்னுற்பத்தி நிலையம், மகாவலி நீர் மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவனமயமாக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

நீர்மின்னுற்பத்தி நிலையங்களை தனியார் மயப்படுத்தினால் மின்னுற்பத்திக்கு மாத்திமல்ல,குடிநீர் விநியோகத்திற்கும் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படும். ஆகவே மறுசீரமைப்பு குழுவினர்சமர்ப்பித்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில்மக்களின் அபிப்ராயம் கோரப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52