கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிக்கு மொரோக்கோ அணி தகுதிபெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற 16 அணிகள் சுற்றுப் போட்டியொன்றில் முன்னாள் சம்பியன் ஸ்பெய்னை பெனல்டி முறையில் 3:0 கோல்களால் மொரோக்கோ வென்றது.
இப்போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரத்தில் எந்த அணியும் கோல் புகுத்தவில்லை.
இதனால் மேலதிக 30 நிமிட ஆட்டம் நேரம் வழங்கப்பட்டது.
அதிலும் கோல் எதுவும் புகுத்தப்படவில்லை.
அதன்பின் தலா 5 பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
இதில் 3:0 கோல்கள் விகிதத்தில் மொரோக்கோ அணி வெற்றி பெற்றது.
மொரோக்கோ வீரர்களான அப்தெல்ஹமீத் சபிரி, ஹக்கீம் ஸியேச், அச்ரப் ஹக்கிமி ஆகியோர் பெனால்டி முறையில் கோல்களைப் புகுத்தினர்.
மொரோக்கோ கோல் காப்பாளர் யாசின் பவ்னோ சிறப்பாக செயற்பட்டு,, ஸ்பானிய வீரரகள் உதைத்த பந்தகளைத் தடுத்தார்.
உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் முதன்முறையாக மொரோக்கோ கால் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஸ்பெய்ன் 2010 ஆம் ஆண்டில் உலகக்கிண்ணத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM