இந்திய வம்சாவளி தமிழர்களான மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆவது ஆண்டை முன்னிட்டு விசேட விழா ஒன்றை நடத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பணிகளை முன்னெடுத்துவருதுடன், இந்த விழாவில் பிரதம அதிநிதியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரழைப்பதற்கான அழைப்பிதழை வழங்கவும் நடவடிக்கையெடுத்துள்ளதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
1823 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையின் மத்தியமலைநாட்டில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிப்புரிவதற்காக ஆங்கிலேயர்கள் தமிழகத்திலிருந்து மக்களை வரவழைத்துடன் அவர்களை தோட்டங்களில் குடியமர்த்தினர்.
மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகைதந்து 200ஆவது ஆண்டை முன்னிட்டு அதனை கொண்டாட இ.தொ.கா நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்போது கலை, கலாசாரம், பண்பாடு, இலக்கியம் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுகளின் ஊடாக மலையக மக்களின் திறமைகளை உலகறிய செய்வது இதன் நோக்காகும்.
இந்த விழாவில் மலையகத் தமிழர்களின் எதிர்கால பயணம் மற்றும் அவர்களுக்கான திட்டங்கள் தொடர்பில் கருத்தாடல்களும் இடம்பெறவுள்ளன.
விழாவுக்கு பிரதம அதிதியாக இந்தியப் பிரதமரை அழைக்க இ.தொ.கா. நடவடிக்கையெடுத்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில் பல்வேறு தலைவர்களை அழைக்கவும் இ.தொ.கா முடிவுசெய்துள்ளது. விழாவை சிறப்பாக செய்வதற்கான ஏற்பாடுகளை இ.தொ.கா செய்துவருவதாகவும் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM