யாழ்ப்பாணம் உயர் தொழில் நுட்ப நிறுவனத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு தினம் கடந்த 04ஆம் திகதி காலை 9மணியளவில் யாழ். மத்தியகல்லூரிய் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது.
நிகழ்வில் 25 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு யாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியினரால் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கலை கலாச்சார விளையாட்டு போட்டிகளுக்கான விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றதோடு 25ஆவது ஆண்டு நினைவு மலரும் வெளியிடப்பட்டது.
தொடரச்சியாக உயர்தொழில்நுட்பவியல் கல்லூரியின் மாணவர்களால் கலைநிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டதோடு, 25ஆவது ஆண்டினை வெளிப்படுத்தி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இதன் பொழுது இலங்கை உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மகேஷ் எதிரிசிங்க, யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடாதிபதி பேராசிரியர் பிரபாகரன், யாழ். உயர் தொழிலுநுட்ப கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கோகிலன், உயர்தொழில்நுட்பட கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளர்கள், யாழ். உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
உயர் கல்வியமைச்சின் கீழ் 1996ஆம் ஆண்டளவில் யாழில் ஆரம்பமான உயர் தொழில்நுட்பவியல் நிறுவனமானது மாணவர்களுக்கு தேசிய உயர்கல்வி டிப்ளோமாவினை வழங்குவதோடு தற்பொழுது யாழ். நகரில் எட்டு கற்கை நெறிகளை வழங்கி வருவதோடு நாடாளாவியரீதியில் அனைத்து பகுதிகளில் இருந்தும் வருகை தரும் மாணவர்கள் உயர்கல்வியை தொடருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM