மருதமுனையில் கரைவலைகள் மூலம் பாரை மீன்களை அள்ளும் மீனவர்கள்

Published By: Vishnu

04 Dec, 2022 | 08:23 PM
image

காலநிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால் எண்ணற்ற பாரை மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.

அப்பகுதி கடற்கரைகளில் கடந்த சில வாரங்களாக இலட்சக்கணக்கில் பாரை மீன்கள், வளையா மீன்கள், சுறா மீன்கள் கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு, அவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதேபோன்று இன்றைய தினமும் மருதமுனை, சாய்ந்தமருது, கல்முனை பகுதிகளில் பாரை இன மீன்கள் அதிகளவில் கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ள பாரை மீன்களில் ஒரு மீனின் பெறுமதி சுமார் 1500 - 1800 ரூபா என விலை நிர்ணயிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மீன்கள் விற்கப்படுகின்றன. 

இதேவேளை மலிவான விலையில் கிளவால், வளையா மீன்களும்  விற்கப்படுகின்றன. அதன்படி 1 கிலோ வளையா மீன் 400 ருபாவாகவும், 1 கிலோ கிளவால் மீன் 600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

அத்துடன் இவ்வாறு கரைவலைகள் மூலம் மீன்களை பிடித்து விற்கும் ஒரு மீனவரின் ஒரு நாள் வருமானம் 10 - 20 இலட்சங்களாக இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. 

தற்போது மருதமுனை, கல்முனை கடற்கரை பகுதிகளில் கரைவலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தூண்டில் முதலான மீன்பிடி முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55