ஆட்டுக் குடல் குழம்பு

Published By: Ponmalar

03 Dec, 2022 | 02:45 PM
image

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த ஆட்டு குடல் – 1 கிலோ கிராம்

இஞ்சி, வெ. பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 150 கிராம்

தேங்காய் துருவல் – சிறிதளவு

பெரிய வெங்காயம் - 50 கிராம்

தக்காளி – 2 பெரியது

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தனியா தூள் - 1/2 தேக்கரண்டி

பெ.சீரகம், சீரக தூள் – தலா 1 தேக்கரண்டி

க.பட்டை - 2 துண்டு

கிராம்பு - 2

ஏலம் - 1

பெ.சீரகம் - 1/2 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

குடலை நன்றாக மஞ்சள் தூள் சேர்த்து கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

முதலில் இஞ்சி, வெ. பூண்டு, சின்ன வெங்காயம், தேங்காய் இவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி க.பட்டை, பெ,சீரகம், கிராம்பு, ஏலம் போட்டு தாளித்த பின் அரிந்த பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி, வெ. பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அவை வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும், தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய், கொத்தமல்லி, பெ,சீரகம், சீரக தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கிய பின்னர் சுத்தம் செய்த குடலையும் அதனுடன் சேர்த்து குக்கரை மூடி 10 விசில் விட்டு இறக்கவும்.

தண்ணீர் அதிகமாக சேர்க்க கூடாது, ஏனெனில் குடலில் நீர் தன்மை இருப்பதால் அதிலேயே குடல் வெந்துவிடும்.

விசில் எண்ணிக்கை முடிந்ததும் குக்கரில் மூடியை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான குடல் குழம்பு ரெடி!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்