கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் முதல் சுற்றுப் போட்டியொன்றில் போர்த்துகல் அணியை தோற்கடித்த தென் கொரியா, 2 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றது.
கத்தாரின் அல் ரையான் நகரிலுள்ள எட்யூகேசன் சிட்டி அரங்கில் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற, குழு எச் அணிகளுக்கு இடையிலான இப்போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துகல் அணியை சன் ஹேவுங் மின் தலைமையிலான தென் கொரியா 2:1 விகிதத்தில் வென்றது.
போட்டியின் 5 ஆவது நிமிடத்தில் போர்த்துகல் வீரர் ரிக்கார்டோ ஹோர்ட்டோ கோல் புகுத்தினார்.
27 ஆவது நிமிடத்தில் தென் கொரியாவின் கிம் யோங்வான் கோல் புகுத்தி கோல் எண்ணிக்கையை சமன் செய்தார்.
எனினும், உபாதை ஈடு நேரத்தின்போது 91 ஆவது நிமிடத்தில் தென் கொரியாவின் ஹ்வாங் சீசான் அடித்த கோல் தென் கொரியாவை 2:1 விகித்ததில் வெற்ற பெறச் செய்தது.
இதேவேளை குழு எச்சிலுள்ள உருகுவே – கானா அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற போட்டியில் உருகுவே 2:0 கோல்கள் விகிதத்தில் வென்றது.
எனினும் குழு எச் இலிருந்து போர்த்துகலும் தென் கொரியாவும் 2 ஆவது சுற்றுக்குள் நுழைந்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM