யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் இசைச் சங்கமத்தின் இறுதிப் போட்டி நேற்று முதலாம் திகதி காலை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்ரமணியம் பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வுநிலை சங்கீதத் துறை ஆசிரியர் சிவகுமார் சக்திதேவி கலந்துகொண்டார்.
இசைச் சங்கமத்தின் இறுதிப் போட்டியானது கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர்களான விக்னேஸ்வரி நரேந்திரா , மகாலிங்கம் நிரேஸ்குமார் ஆகியோரின் ஒழுங்கமைக்கப்பில் நடைபெற்றது.
குறித்த இசைச் சங்கமத்தின் இறுதிப் போட்டியாளர்களாக கல்லூரியின் ஆசிரிய மாணவர்களான சஜிந்தா ஏகாநந்தன் , றொசான் றொபின், உஜேனிதா தங்கமாணிக்கம், கவிதாஞ்சலி ஜீவா ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.
இந் நிகழ்வில் கல்லூரியின் விரிவுரையாளர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், ஆசிரிய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM