ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மத்தியில் மந்தபோசாக்கு 15 வீதமாக காணப்படுவதாக சுகாதார அமைச்சின் குடும்ப பணியகம் தெரிவித்துள்ளது.
2022 ஒக்டோபரில் சிறுவர்களின் மானுடவியல் அளவீடுகளின் அடிப்படையில் குடும்ப சுகாதார பணியகம் தயாரித்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மத்தியில் மந்தபோசாக்கு15 வீதமாக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஐந்து வயதிற்கு உட்பட்ட 95 வீதமான சிறுவர்களின் நிலைiயை நாங்கள் மதிப்பிட்டுள்ளோம் இது ஒரு சாதனை இதன்போது 15 வீதமான சிறுவர்கள் எதிர்பார்க்கப்படும் எடையை விட குறைவான எடையை கொண்டிருந்தனர் என குடும்ப சுகாதார பணியகத்தின் மருத்துவர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்தின்மை அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது,அதேவேளை அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றில் சிறிது குறைவு காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் கிளிநொச்சியின் ஊட்டச்சத்து நிலைமையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் ஆராயவேண்டும் எனவும் குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM