ஜெயலலிதாவின் மறைவையடுத்து, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இன்று பதவியேற்றார்.
ஆளுநர் மாளிகையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றதும், 31 அமைச்சர்கள் கூட்டாக பதவியேற்றுக்கொண்டனர்.
பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு ஜெயலலிதாவின் மறைவுக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா நேற்றிரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார்.
ஜெயலலிதாவின் உயிரிழந்தமையினை, அப்பலோ வைத்தியசாலை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM