வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வோரை பதிவு செய்யும் போது கடவுச்சீட்டில் ஒட்டப்படும் பாதுகாப்பு முத்திரையைப் பயன்படுத்தி ஓமான் நாட்டுக்கு தொழிலுக்குச் செல்ல முயன்ற இரண்டு பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலைய பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த இந்த இரண்டு பெண்களும் விமான நிலைய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளைத் தவிர்த்துவிட்டு, ஓமானுக்கு செல்வதற்காக குடிவரவுத் திணைக்களத்தின் கருமபீடத்துக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது இவர்களால் அங்கு வழங்கப்பட்ட அவர்களது கடவுச்சீட்டில் இடப்பட்டிருந்த உத்தியோகபூர்வ பாதுகாப்பு முத்திரைகள் மற்றும் வெளிநாட்டு பணியக உத்தியோகபூர்வ முத்திரைகள் என்பன போலியானவை என கண்டறிந்த குடிவரவு அதிகாரிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலைய பிரிவுக்கு அவர்களை அனுப்பி வைத்தனர்.
இதன்போது அவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், கொழும்பைச் சேர்ந்த தரகர் ஒருவரே இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM