காலி முகத்திடலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 3

29 Nov, 2022 | 12:16 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கொழும்பு, காலி முகத்திடல் அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி முகத்துவாரப் பகுதியில் உள்ள கொடி கம்பத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இவர் சில காலமாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று  நேற்று (28) வீடு திரும்பியதாகவும், அதன் பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33