(எம்.வை.எம்.சியாம்)
கொழும்பு, காலி முகத்திடல் அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி முகத்துவாரப் பகுதியில் உள்ள கொடி கம்பத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இவர் சில காலமாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நேற்று (28) வீடு திரும்பியதாகவும், அதன் பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM