சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி, தயாரித்து, கதையின் நாயகனாக நடித்து, 2002 ஆம் ஆண்டில் வெளியான 'பாபா' திரைப்படம், நவீன தொழில்நுட்ப மாற்றங்களுடன் மீண்டும் வெளியாகவிருக்கிறது.
தமிழ் திரையுலகில் முடி சூடா மன்னனாக வலம் வரும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது 'ஜெயிலர்' எனும் பெயரில் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என அவதானிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளன்று அவர் நடிப்பில் வெளியான படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டு ரசிகர்களுடன் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அவரது பிறந்த நாளன்று 'வள்ளி' என்ற திரைப்படத்திற்கு பிறகு, அவர் திரைக்கதை எழுதி, தயாரித்து, கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் 'பாபா'. இந்த திரைப்படத்தை 19 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் வடிவில் புதுப்பிக்கப்பட்டு, ஒரே ஒரு காட்சி திரையிடப்படும் என தகவல்கள் வெளியானது.
இந்தத் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலானது. உலகெங்கும் உள்ள சுப்பர் ஸ்டாரின் ரசிகர்கள், தங்கள் அருகாமையில் உள்ள பட மாளிகையிலும் 'பாபா' திரைப்படத்தை திரையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
இதன் காரணமாக இப்படத்தில் சில காட்சிகள் இணைக்கப்பட்டு அதற்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பின்னணி பேசி, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை படக் குழுவினரும் உறுதி செய்துள்ளனர். இதனால் சுப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் 'பாபா'வை மீண்டும் தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இதனிடையே சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தயாரித்து, நடித்த 'பாபா' திரைப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும், இதனால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் வரவழைத்து இழப்பீட்டுத் தொகையை வழங்கினார் என்பதும், இந்தப் படம் தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு திரையிடப்படவிருப்பதால், திரையுலக வணிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM