ருஹுணு தேசிய கல்வி பீடத்தில் மோதல் : 6 பேருக்கு விளக்கமறியல்!

Published By: Vishnu

28 Nov, 2022 | 07:55 PM
image

ருஹுணு தேசிய கல்வி பீடத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 6  பேர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று (28)  காலி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேரில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனையோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் தொடர்ந்தும்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்