துபாய், ஐரோப்பாவில் 30 தொன் போதைப்பொருள் மீட்பு: 49 கடத்தல் புள்ளிகள் கைது

Published By: Sethu

28 Nov, 2022 | 04:16 PM
image

 துபாய் மற்றும் ஐரோப்பாவில் போதைப்பொருள் கடத்தல் புள்ளிகள் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், 30 தொன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் அமைப்பான யூரோபோல் இன்று தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்காக, பல நாடுகளின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சர்வதேச நடவடிக்கையின்போது இப்போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

துபாயுடன், பிரான்ஸ், ஸ்பெய்ன், பெல்ஜியம் நெதர்லாந்து நாடுகளில் இக்கைதுகள் இடம்பெற்றதாக  யூரோபோல் தெரிவித்துள்ளது. 

நவம்பர் 8 ஆம் திகதிக்கும் 19 ஆம் திகதிக்கும் இடைக்க்பட்ட காலத்தில் இம்முற்றுகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக யூரோபோல் தெரிவித்துள்ளது.

இந்த போதைப்பொருள் புள்ளிகள், யூரோபோலினால் உயர் பெறுமானமுடைய இலக்குகளாக் கருதப்பட்டவர்கள் எனவும், ஐரோப்பாவில் மூன்றில் ஒரு பங்கு கொக்கேய்ன் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் 'சுப்பர் கார்ட்டெல் வலையமைப்பாக அறியப்பட்டவர்கள் எனவும் யூரோ போல்  தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17