துபாய் மற்றும் ஐரோப்பாவில் போதைப்பொருள் கடத்தல் புள்ளிகள் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், 30 தொன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் அமைப்பான யூரோபோல் இன்று தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்காக, பல நாடுகளின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சர்வதேச நடவடிக்கையின்போது இப்போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
துபாயுடன், பிரான்ஸ், ஸ்பெய்ன், பெல்ஜியம் நெதர்லாந்து நாடுகளில் இக்கைதுகள் இடம்பெற்றதாக யூரோபோல் தெரிவித்துள்ளது.
நவம்பர் 8 ஆம் திகதிக்கும் 19 ஆம் திகதிக்கும் இடைக்க்பட்ட காலத்தில் இம்முற்றுகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக யூரோபோல் தெரிவித்துள்ளது.
இந்த போதைப்பொருள் புள்ளிகள், யூரோபோலினால் உயர் பெறுமானமுடைய இலக்குகளாக் கருதப்பட்டவர்கள் எனவும், ஐரோப்பாவில் மூன்றில் ஒரு பங்கு கொக்கேய்ன் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் 'சுப்பர் கார்ட்டெல் வலையமைப்பாக அறியப்பட்டவர்கள் எனவும் யூரோ போல் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM