மின்சாரத்தில் சிக்குண்டு யானை உயிரிழப்பு

Published By: Digital Desk 2

28 Nov, 2022 | 04:45 PM
image

வவுனியா, புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 35 வயதுடைய யானையின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை திங்கட்கிழமை (நவ.28) இடம்பெற்றதாக வவுனியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த காட்டு யானையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை வனஜீவராசிகள் திணைக்களத்தின் வடமாகாணத்திற்கு பொறுப்பான கால்நடை வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பா.கிரிதரன் மேற்கொண்டிருந்தார்.

உயிரிழந்த காட்டு யானை சுமார் 8 அடி உயரம் கொண்டதாகவும், விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கேபிளில் அகப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (நவ.27) இரவு உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியா, புளியங்குளம், பரசங்குளம் பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வவுனியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31