(எம்.மனோசித்ரா)
இலங்கையில் வலுசக்தி துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் , புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் காலிட் நாசர் அல்அமெரி மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலின் போது, இலங்கையில் வலுசக்தி துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதலீடுகளுக்கு அதிக சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவித்த தூதுவர் காலித் நாசர் அல்அமெரி, இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதில் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தூதுவருக்குப் பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் தொழில்துறை போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வாய்ப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து விரைவாக மீள்வதற்கும் , அபிவிருத்திப் பணிகளுக்காகவும் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் உதவிகளுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன இதன் போது நன்றி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM