புனரமைப்பு பணிகள் காரணமாக ஜனவரி 15 ஆம் திகதி தொடக்கம் 5 மாதங்களுக்கு மஹiவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவைகள் இடம்பெறாது என அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் வன்னி மாவட்ட சபை உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் பந்துல குணவர்தன,
உங்கள் கோரிக்கை தொடர்பில் நாங்கள் விசேட கவனம் செலுத்துவோம். மஹவையிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் சேவைகள் ஜனவரி 15ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு நிறுத்தப்படும்.
இந்தக் கால பகுதியில் குறித்த பாதை முழுமையாக சீரமைக்கப்படும். இதன் மூலம் யாழ்ப்பாணத்துக்கு சிறந்த ரயில் சேவையை வழங்க முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM