தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியரான கண்டி கெலிஓயாவைச் சேர்ந்த சாதியா பெளசர் எழுதிய மலையக இலக்கிய ஆய்வு நூல்கள் இரண்டு கண்டி ஜின்னா வரவேற்பு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வௌயிடப்பட்டது.
‘மலையகக் கவிதைகளும் மக்களும்’ மற்றும் ‘மலையகக் கவிதைகளில் பெண்களும் சிறுவர்களும்’ என்ற இரு ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்ட இவ்விழாவினை கண்டி தமிழ் வர்த்தகர் சங்கம் மற்றும் முஸ்லிம் வர்த்தகர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதன் போதே அதிதிகளாக கலந்து கொண்ட தமிழ் மொழி தொடர்பான பேராசிரியர்களான, ஓய்வு நிலைப் பேராசிரியர் துரை மனோகரன், தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா, ஓய்வு நிலைப் பேராசிரியர் எம்,ஏ. நுஹ்மான, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் (திருமதி) சாதியா பௌசர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் தமிழ் வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த பரமேஷ்வரன, அன்பழகள், தட்சணாமூர்த்தி, முத்தையாப்பிள்ளை ஶ்ரீகாந்தன், மூஸ்லிம் வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த ஹபீல் சலீம்தீன், என்.எம்.எம். மன்சூர், ஏ.சி.எம்.அப்துல் றஹ்மான் உற்பட பலர் கெளரவிப்பு வைபவத்தில் பங்கெடுத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM