சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா ? - கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அமைச்சர் பந்துல

Published By: Digital Desk 2

28 Nov, 2022 | 12:40 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்ஆர்.எம்.வசீம்)

ஊடகங்கள் உயர் ஊடக கலாசாரத்தை பேணும் வகையில் செயற்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஊடகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு எதிராக செயற்பட போவதில்லை. சமூக ஊடகங்கள் தற்போது ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை ( நவ . 28) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஊடகங்களின் சுதந்திரத்தையும்,உரிமைகளையும் மறுக்கவில்லை.ஊடகச் சுதந்திரத்திற்கு எதிராக செயற்படும் போது தோற்றம் பெறும் விளைவுகளுக்கு வரலாற்றில் பல சம்பவங்கள் சான்றாக உள்ளன.

பல்வேறு காரணிகளினால் நாட்டின் நற்பெயர் தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் தவறான சித்தரிப்புக்கள் காணப்படுகின்றன.

ஒருசில ஊடகங்கள் ஊடகவியலின் அடிப்படை நெறிமுறைகள் மற்றும் ஊடக ஒழுக்கவியலுக்கு எதிராக செயற்படுவதை மறுக்க முடியாது.

நாட்டின் முன்னேற்றத்தில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.ஆகவே ஊடகங்கள் தாய் நாட்டுக்காக பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

சமூக ஊடகங்களை கண்காணிக்கும் வகையிலான சட்டத்தை இயற்ற அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.சமூக ஊடகங்கள் தற்போது ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா என்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

ஊடகங்கள் உயர் ஊடக கலாசாரத்தை பேணும் வகையில் செயற்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.ஊடகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு எதிராக செயற்பட போவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04