வன்னி ஹோப் மற்றும் ரட்ணம் பவுன்டேஷன் நிறுவன அனுசரணையில் மூதுார் சேனையூர் கிராமத்தில் அனாமிகா பண்பாட்டு மைய வளாகத்தில் கணினி வளநிலையம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கடந்த 26ஆம் திகதி அனாமிக்கா பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரட்ணசிங்கம் தலமையைில் இடம்பெற்றது.
டிஜிட்டல் கல்வியை கிராமங்களில் மேம்படுத்தும் நோக்குடன் அவுஸ்ரேலியாவில் இயங்கி வரும் வன்னி ஹோப் மற்றும் ஐக்கிய இராஜியத்தில் இயங்கிவரும் ரட்ணம் பவுன்டேஷன் நிறுவனங்களின் நிதிப்பங்களிப்புடன் மேற்படி கணினி வளநிலையம் ஸ்தாபிக்கப்பட்டு மக்கள் பாவணைக்காக கையளிக்கப்பட்டது.
குறித்த கணனி வளநிலையத்தின் மூலம் சம்பூர், சேனையூர் போன்ற கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் போன்றவர்கள் கணனி அறிவினைப் பெற்று நன்மையடையவுள்ளனர்.
இந்த நிகழ்வில் அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த வன்னி ஹோப் நிறுவனத்தின் செயலாளர் டாக்டர் மாலதி வரண், வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளரும் மக்கள் சேரைவ மன்றத்தின் தலைவருமான எம். ரீ. எம். பாரிஸ், அனாமிக்கா பண்பாட்டு மையத்தின் இயக்குநர் திருமதி பாலசுகுமார் உட்பட பெற்றோர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM