(ஐங்கரன் விக்னேஸ்வரா)
முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட, மிகவும் அடையாளம் காணக்கூடிய நினைவுச் சின்னங்களின் பின்னணியில் உள்ள வரலாற்றை நாங்கள் ஆராய்ந்து பார்த்தால், மானுட தியாகத்தின் உச்சத்தை அறியலாம்.
உலக நாடுகளின் வரலாற்றை திரும்பிப் பார்த்தால், ஒவ்வொரு நாடும் தனது தேசத்து உயிர்த்தியாகிகளை தேச புருஷர்களாக போற்றி தேசிய தினம் கொண்டாடுகிறது.
உலகின் எந்த தேசத்தை நோக்கினாலும், போர் நினைவுச் சின்னங்கள், மாவீரர் துயிலகங்கள் தேசச் சொத்துக்களாகவே பேணிப் பாதுகாக்கப்பட்டு, பூசிக்கப்பட்டு வருகின்றன.
ரஷ்யாவில் மிகவும் அடையாளம் காணக்கூடிய நினைவுச் சின்னங்களில் ஒன்றான உலகில் எங்குமில்லாத ‘தாய்நாடு அழைக்கிறது’ சிலையானது 91 மீற்றர் உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது.
இது ‘ஸ்டாலின்கிரேட்’ போரின் நினைவாக ரஷ்யாவின் வோல்கோகிராட்டில் உள்ள மாமேவ் குர்கானில் அமைந்துள்ளது.
இந்த ‘தாய்நாடு அழைக்கிறது’ நினைவுச் சின்னமானது சிற்பி யெவ்ஜெனிவுச்செடிச் மற்றும் கட்டமைப்பு பொறியியலாளர் நிகோலாய் நிகிடின் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது.
1967ஆம் ஆண்டில் இது உலகின் மிகப்பெரிய சிலையாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் உலகிலேயே மிகப்பெரிய 'பெண்சிலை' என்ற சிறப்பும் இதற்கே உண்டு.
அரிசோனா நினைவுச்சின்னம் ஹவாய் ஹொனலுலுவில் உள்ள பேர்ள் துறைமுகத்தில் அமைந்துள்ளது. பேர்ள் துறைமுகத்தின் மீதான தாக்குதலின்போது யு.எஸ்.எஸ்.அரிசோனா கப்பலில் உயிரிழந்த 1177 மாலுமிகள் மற்றும் கடற்படையினர் 1102 பேர் நிரந்தரமாய் ஓய்வெடுக்கும் இடத்தை அது குறிக்கிறது.
1962ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நினைவிடத்தை ஒவ்வோர் ஆண்டும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வையிடுகின்றனர்.
கப்பலின் மூழ்கிய எச்சங்கள் 1989 மே 5 அன்று தேசிய வரலாற்று அடையாளமாக அறிவிக்கப்பட்டது.
அடுத்து, இரண்டாம் உலகப்போரின் பெண்களுக்கான நினைவுச் சின்னம் லண்டனில் உள்ள வைட்ஹாலில் அமைந்துள்ள பிரித்தானிய தேசிய போர் நினைவுச் சின்னமாகும்.
இது ஜோன் என்பவரால் செதுக்கப்பட்டு, W.மில்ஸ், ராணி எலிசபெத் II ஆகியோரால் திறக்கப்பட்டதோடு, 2005 ஜூலையில் பரோனஸ் பூத்ரொய்டால் நிர்மாணிக்கப்பட்டதாகும். இது 22 அடி உயரத்தில் உள்ளதோடு, அதன் பக்கத்திலுள்ள எழுத்துகள் போர்க்கால புத்தகங்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துருவை பிரதிபலிக்கிறது.
சிற்பத்தில் உள்ள 17 விதமான ஆடைகளும் போரின்போது பெண்கள் நூற்றுக்கணக்கான வெவ்வேறு பணிகளை செய்ததாக சுட்டிக்காட்டுகிறது.
அடுத்து, 150 ஏக்கர் காடுகளை உள்ளடக்கியதுடன் முதலாம் உலகப்போர் மற்றும் 20ஆம் நூற்றாண்டின் பிற மோதல்களில் வீழ்ந்த இராணுவ வீரர்கள் மற்றும் பெண்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷையரில் உள்ள லிச்ஃபீல்ட் அருகே அமைந்துள்ளது.
நேச நாட்டுப் படைகளின் ஒரு பகுதியாக நீண்டகாலமாக சேவை செய்து, போரில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாக இது உருவாக்கம் பெற்றுள்ளது.
இந்த நினைவுச்சின்னங்கள் நான்கு வெண்கல வர்ணம் பூசப்பட்ட பொம்மை வீரர்களிடமிருந்து வந்தது போல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை டாக்டர் அண்ட்ரெஜ் மீசன் கிலானோவ்ஸ்கி உருவாக்கியுள்ளார்.
இந்த நினைவுச்சின்னம் போலந்து ஆயுதப் படைகளின் நான்கு கிளைகளை அடிப்படையாகக் கொண்டது.
விமானப்படை, இராணுவம், கடற்படை மற்றும் போலந்து துணைப்படையை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த போலந்து போர் நினைவுச் சின்னத்துக்கான வடிவமைப்பினை நிறுவியவர் சோபோசின்ஸ்கி என்பவர் ஆவார்.
மேலும், அலோய்ஷா என்பது 11 மீற்றர் உயரமுள்ள ஒரு சோவியத் சிப்பாயின் உறுதியான வலுவூட்டப்பட்ட சிலையாகும். இது 1943 - 1946இல் பல்கேரிய விடுதலையின் போது சோவியத் உயிரிழப்புகளை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்டது.
ஆயினும், ப்லோவ்டிவ் அதிகாரிகள் 1989இல் சிலையை அகற்ற முயன்றனர்.
பின்னர் 1996இல் மீண்டும் அகற்றுவதற்கு முயற்சித்தபோது நிரந்தர பாதுகாப்புக்கு வழிவகுத்தது. சிலை உடைக்கப்படாமல் இருக்க காவலர்கள் இரவு பகலாக சிலையருகே நின்றனர்.
உக்ரேனிய முன்னணியின் சிப்பாய் அலியோஷா ஸ்கர்லடோவ் இந்தச் சிலையை அமைக்க உத்வேகமாக பணியாற்றினார்.
இரண்டாம் உலகப்போரின் மற்றொரு சின்னமான கடல் வீரர்களின் போர் நினைவுச்சின்னம் தி ஐவோ ஜிமா நினைவுச்சின்னம் என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஆர்லிங்டன் தேசிய கல்லறையின் நுழைவாயிலில் அமைந்துள்ளது.
இந்த நினைவுச் சின்னம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கட்டப்பட்டது. மேலும், 1775 முதல் அமெரிக்காவின் பாதுகாப்புக்காக உயிரிழந்த அமெரிக்காவின் கடல் வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
23 பெப்ரவரி 1945இல் ஐவோ ஜிமா போரின்போது சூரிபாச்சி மலையில் பெரிய அமெரிக்க கொடியை உயர்த்திய ஆறு படைவீரர்களை இந்த சிலை கொண்டுள்ளது.
இந்த நினைவுச் சின்னம் இரண்டாம் உலகப் போரின்போது பிரான்ஸிலிருந்து நாஜி வதை முகாம்களுக்கு நாடு கடத்தப்பட்டவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மெமோரியல் டெஸ் மார்டியர்ஸ் டி லா டிபோர்ட்டேஷன் (நாடு கடத்தப்பட்டவரின் நினைவுச் சின்னம்) என்பது பிரான்ஸின் பாரிஸில் உள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நவீன கட்டடக் கலைஞர் ஜோர்ஜஸ் ஹென்றி பிங்குசன் என்பவரால் இந்த நினைவுச் சின்னம் வடிவமைக்கப்பட்டது. 1962இல் சார்லஸ் டி கோல் என்பவரால் திறந்துவைக்கப்பட்டது.
கப்பலின் முனை போன்ற வடிவில் இரண்டு படிக்கட்டுகள் மற்றும் ஒரு தாழ்வான சதுரம் ஆகியவை நினைவுச்சின்னத்தை அணுக அனுமதிக்கின்றன.
இதனுள் இரண்டு தேவாலயங்கள் உட்பட ஒரு அறுகோண பார்வைக்கு வழிவகுக்கிறது. அதன் சுவர்களில் பல வரலாற்று இலக்கியப் பகுதிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸின் அறியப்படாத நாடு கடத்தப்பட்டவரின் கல்லறையானது நாஜிகளின் கீழ் பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்ட 200,000 மக்களை குறிக்கும் நினைவுச் சின்னமாகும்.
இரண்டாம் உலகப் போரின்போது ரஷ்யாவின் டான்பாஸை விடுவித்த அனைத்து இராணுவ பிரிவுகளுக்கும் அமைப்புகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் டோனெட்ஸ்கில் உள்ள லெனின் காம்சோமால் பூங்காவில் அமைந்துள்ளது.
இந்த நினைவுச் சின்னம் முக்கோண வடிவில் உள்ளது. டொனெட்ஸ்க் டெரிகோன்களின் நிழற்படங்களை அவற்றின் கூர்மையான விளிம்புகளால் அடையாளப்படுத்துகிறது.
நினைவுச் சின்னத்தின் அடிவாரத்தில் ஒரு ‘நித்திய சுடர்’அமைந்துள்ளது.
டான்பாஸ் விடுதலையாளர்களுக்கான நினைவுச்சின்ன மேடையில் ஒரு சுரங்கத் தொழிலாளி மற்றும் சிப்பாய்களின் சிற்பம் உள்ளது. அவர்கள் ஒரு வாளை, அதன் விளிம்பை கீழே தங்கள் வலது கைகளில் பிடிக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் ஐந்து புள்ளிகள் கொண்ட நட்சத்திரத்தின் வடிவம் உள்ளது.
நினைவு நாள் நிகழ்வுகளின் போது வீரர்கள் நினைவுச் சின்னத்துக்கு நகரத்தின் வழியாக அணிவகுத்துச் செல்வர்.
உலகப் போர் முடிந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான போர் நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டு, அவர்களின் தியாகங்கள் நினைவுகூரப்பட்டு வருகின்றன. அவற்றில் கனடா மற்றும் பிரித்தானியாவில் கார்த்திகை பிறந்தால் அம்மக்கள் ‘பொப்பி' எனும் பூ அணிந்து தமது வாழ்வுக்காக போரில் உயிர்நீத்த தமது போர்வீரர்களை நினைவுகூருவதை காணலாம்.
அதுபோல பிரான்ஸில் ஃப்ரெஞ்சுப் புரட்சியின் நினைவாக ஆடி 14ஆம் நாள் தேசிய தினமாக மக்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM