அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) 2 பேர் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று மின் கம்பத்தின் மீது மோதி அந்தரத்தில் சிக்கிக்கொண்டதால் சுமார் ஒரு இலட்சம் வீடுகள் இருளில் மூழ்கியதான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலம் மொவ்ண்ட்கொமெரி நகரத்தின் ஹைதுர்பர்க் என்ற பகுதியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன.
இந்நிலையில், மொவ்ண்ட்கொமெரி நகருக்கு மின் விநியோகம் வழங்கும் மின் கம்பத்தில் மீது நேற்று இரவு சிறிய ரக விமானம் மோதி அந்தரத்தில் தொங்கியுள்ளது.
குறித்த விமானம் மோதியதால் மின் இணைப்பு தடைபட்டது. இதனால், 1 லட்சம் வீடுகள், தொழில்நிறுவனங்களில் மின் இணைப்பு தடைபட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்கம்பத்தின் மீது மோதி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் விமானத்தில் சிக்கிய 2 பேரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மேலும், விமானம் மோதியதால் இருளில் மூழ்கிய நகருக்கு மின் இணைப்பை மீண்டும் வழங்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM