(எம்.மனோசித்ரா)
பாகிஸ்தானின் பிரபல மருந்து நிறுவனமான ஹைனூன் ஆய்வு கூடத்தினால் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துவதற்கான மருந்துகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இந்த மருந்துகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இந்த மருந்துகள் கையளிக்கப்பட்டதோடு , இவ்வாறு 6 மாதங்களுக்கு ஒரு முறை இலங்கைக்குத் தேவையான மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
'இவ்வாறான வேலைத்திட்டம் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்த உதவும், மேலும் அயல் நாடான இலங்கை இந்த நேரத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிக்க உதவுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.' என்று ஹைனூன் ஆய்வுகூட நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றதிகாரி வைத்தியர் அதீல் அப்பாஸ் இதன் போது தெரிவித்தார்.
இதன் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல , ' இலங்கை வரலாற்றில் மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளதுடன், இந்த பொருளாதார நெருக்கடி சுகாதாரத்துறையையும் பாதித்துள்ளது.
அத்தியாவசிய மருந்துகள் பலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் இவ்வேளையில், பல நட்பு நாடுகளையும் சர்வதேசத்தையும் கொண்டிருப்பது எமக்கு பெரும் பலமாகும்' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM