எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் ஒருவர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான கந்தையா சபாரத்தினம் (62) என்ற விவசாயி ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டு, குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பூநகரியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் இந்தியா தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கொலை சம்பந்தமான மேலதிக தகவல் எதனையும் உடனே பெற முடியவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் கிளிநொச்சி நீதிமன்றின் நீதவானின் விசாரணையை தொடர்ந்து சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மற்றும் கிளிநொச்சி குற்றத் தடகவியல் பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM