முப்படையிலிருந்து சட்டவிரோதமாக தப்பியோடிய 220 பேர் சரணடைந்துள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
சரணடைந்தவர்களில் 150 பேர் சட்டரீதியாக தங்களது சேவைகளில் இருந்து ஓய்வுபெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளமையை அடுத்து கடந்த 3 நாட்களில் இவ்வாறு 150 பேர் சட்டரீதியாக சேவையிலிருந்து விலகியுள்ளனர்.
இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 220 பேர் சட்டரீதியாக தம்மை சேவையிலிருந்து விலக்குமாறு கோரியிருந்த நிலையில், இதில் 150 பேர் மாத்திரமே சேவையிலிருந்து சட்டரீதியாக விலக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மீதமுள்ளவர்களின் சட்டரீதியான செயற்பாடுகள் நிறைவடைந்ததன் பின்னர் விடுவிக்கப்படவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
முப்படையினருக்கான பொதுமன்னிப்புக்காலம் இம்மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM