பல்கலைக்கழகத்தில் தங்கியிருக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

Published By: Digital Desk 5

27 Nov, 2022 | 02:52 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கல்விக் காலம் முடிவடைத்த பின்னரும்  பல்கலைக்கழகத்தில் தங்கியிருக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து துணைவேந்தர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களில் சுமார் 5 வீதமானவர்கள் அவர்களின் படிப்புக் காலத்தை முடித்த பின்னரும் பல்கலைக்கழகங்களில் உள்ளதாகவும் மேலும் இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி,  இவ்வாறான மாணவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து உபவேந்தர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்  அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

4 வருட பட்டப்படிப்பைப் பெறுவதற்கு பல்கலைக்கழகத்திற்கு நுழையும் மாணவர்கள் 04 வருடங்களில் பட்டம் பெறாவிட்டால் பல்கலைக்கழகத்தில் தங்க முடியாது. 90 வீதமான மாணவர்கள் 4 வருட பட்டப்படிப்பிற்கு பதிவு செய்து 04 வருடங்களில் பட்டப்படிப்பை முடித்துக் கொள்கின்றனர். எஞ்சியவர்கள் மேலும்  03 வருடங்கள்  பட்டப்படிப்பை முடிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் .

அதன்படி,  இவ்வாறான மாணவர்கள் இனிமேல்  பல்கலைக்கழகங்களில் தங்கி இருந்து பட்டப் படிப்பை முடிக்க முடியாது. 

மேலும் வெளியில் இருந்து பரீட்சைக்கு தோற்றி பரீட்சை கட்டணம் உட்பட சகல செலவினங்களையும் அவர்களே ஏற்க வேண்டும்.

இலவசக் கல்விக்காக பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் மாணவர்களுக்கு 4 வருடங்களுக்கு விடுதிகள்,  நீர்,  மின்சாரம், கற்பித்தல் போன்ற வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கின்றது  அதற்கு மேல் இந்த வசதிகள் வழங்கப்பட மாட்டாது.

04 வருடங்களின் பின்னர் மாணவர்கள் பட்டம் பெறாத பட்சத்தில் எஞ்சிய 03 வருடங்களுக்கு பல்கலைக்கழக அனுமதி மற்றும் ஏனைய வசதிகளை பல்கலைக்கழகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாது.

 அது தொடர்பில் அந்த பல்கலைக்கழகங்களின் நிர்வாக சபையே தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02