நாட்டின் வடக்கு மாகாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 27) அடிக்கடி மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுகிறது.
அத்துடன் ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலைப் பொழுதில் பனிமூட்டமான நிலை தென்படக்கூடும்.
இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலையை எதிர்பார்க்கலாம்.
மேலும், நாட்டின் கடற்பரப்புகளில் வடகிழக்கு திசையிலிருந்தோ மாறுபட்ட திசைகளிலிருந்தோ காற்றானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM