பெண்களின் மாதவிடாயானது நிரந்தரமாக நிற்கும் பருவம் மெனோபாஸ் என அழைக்கப்படும். இவ்வாறான மெனோபாஸ் பருவம் ஏற்படும் வயதானது 45 வயதிலிருந்து 55 வயது வரை மாறுபடும். அதாவது சிலரில் 45 வயதில் மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும். சிலரில் 50 வயதில் நிற்கும். சிலரில் 55 வயதில் நிற்கும். இவ்வாறு பாரிய வேறுபாடுகள் உள்ளது. எந்த வயதானாலும் மெனோபாஸ் பருவமடைந்து மாதவிடாய் நிரந்தரமாக நின்று போன பெண்களில் பல மாதங்களின் பின்னர் சரி அல்லது பல வருடங்களின் பின்னர் சரி மீண்டும் மாதவிடாய் போன்ற இரத்தப் போக்கு ஏற்பட்டால் அதன் அர்த்தம் என்ன? இது ஒரு பயப்படக்கூடிய அல்லது அச்சப்படக்கூடிய ஒரு விடயமா?
இவற்றுக்கும் புற்றுநோய்களுக்கும் தொடர்பு உள்ளதா? என பெண்கள் மத்தியில் பல சந்தேகங்கள் ஆரம்பிக்கும். இவற்றுக்கு இன்று விடை காண வேண்டும்.
மெனோபாஸ் பருவத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து மாதவிடாய் போன்ற இரத்தப் போக்கை பல பெண்கள் அச்சத்துடன் வைத்திய ஆலோசனையை நாடி வருகின்றனர். இவர்களுக்கு இந்நிலைமை ஏற்பட என்ன காரணம் எனப்பார்க்க நாம் பரிசோதனைகள் மேற்கொள்வது வழக்கம்.
இதில் முக்கியமாக செய்யப்படும். பரிசோதனை ஸ்கேன் (U.S.SCAN) பரிசோதனை ஆகும். இந்த ஸ்கேன் பரிசோதனையை முதலில் செய்யும்போது நாம் முக்கியமாக கர்ப்பப்பையின் உட்சுவர் தடிப்பை தான் கணிப்போம்.
இதில் கூடுதலான பெண்களில் தடிப்பானது 5mm க்கும் குறைவாகத்தான் இருக்கும். இப்படி 5mm க்கும் குறைவாக இருக்கும் போது கர்ப்பப்பையில் ஆபத்தான நோய்களுக்கோ அல்லது புற்று நோய்களுக்கோ வாய்ப்பில்லை என உறுதியாகக் கூறி மேற்கொண்டு எவ்வித மேலதிக சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.
மெனோபாஸ் பருவத்தின் பின்னர் இரத்தப்போக்கு கண்டு அச்சத்தில் வந்த பல பெண்கள் இந்த செய்தி கேட்டு மன நிம்மதியுடன் வீடு திரும்புகின்றனர்.
எனவே மருத்துவ பரிசோதனையிலும் சரி மருத்துவ ஆலோசனையிலும் சரி விடைகாணக்கூடியதாக உள்ளது. ஆனால், ஒரு சில பெண்களில் இந்த விடயம் குறித்து ஸ்கேன் செய்யும் போது கர்ப்பப்பையின் உட்சுவர் தடிப்பானது 5mmக்கும் கூடுதலாக தடிப்படைந்து காணப்படுகின்றது. இவற்றை நாம் மேற்கொண்டு பரிசோதித்து எவ்வாறான தடிப்புக்கான நோய்க் காரணியை கண்டறிய வேண்டும்.
அதாவது இவர்களை நாம் சத்திரசிகிச்சைக் கூடத்தில் எடுத்து ஒரு சிறிய மயக்கத்தை கொடுத்து கர்ப்பப்பையின் உட்சுவர் பகுதியில் ஒரு பகுதியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். இதனை D and C என்றோ வயிறு கழுவுதல் என்றோ, ஹிஸ்ரஸ் கோப்பி என்றோ அழைக்கலாம். இதன் நோக்கம் உட்சுவர் தடிப்பானது சில சமயம் புற்று நோயாகக் கூட இருக்க முடியுமா எனப் பார்ப்பதேயாகும். அவ்வாறு பரிசோதிக்கும் போது சிலரில் பெறுபேறுகள் புற்றுநோய் என கண்டறியப்படும். மற்றையவர்களில் இவை எவ்வித நோயும் இல்லை. வெறும் இழையங்கள் என்ற பெறுபேறுகளே வருகின்றது.
எனவே இவ்வாறு இவ்விடயத்தை ஸ்கேன் செய்து அதில் சந்தேகிப்பவர்களை வயிறு கழுவுதல் மூலம் பரிசோதித்து அறிந்தால் சரியான சிகிச்சை வழங்க முடியும்.
கர்ப்பப்பை புற்றுநோய் என பெறுபேறு கண்டறிந்தால் அடுத்து செய்ய வேண்டியது கால தாமதம் இல்லாமல் அறுவைச் சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றுவதேயாகும். கர்ப்பப்பை மற்றும் சூலகங்கள் அகற்றுவதன் மூலம் இவ்வாறு கண்டறியப்படும் கர்ப்பப்பை புற்று நோய்க்கும் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
இதனையடுத்து பெரும்பாலானவர்களில் மேற்கொண்டு புற்றுநோய்க்கான மேலதிக சிகிச்சை எதுவும் தேவைப்படுவதில்லை.
இந்த விடயத்தில் எனது கடந்த பல வருட அனுபவங்களை பார்த்தால் மெனோபாஸ் பருவத்திற்கு பின்னர் இரத்தப்போக்கு உள்ளபோது பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ ஆலோசனைக்கு வருவது தாமதம் இல்லாமல் நடக்கின்றது. நாமும் காலத்தை வீணடிக்காத ஸ்கேன் பரிசோதனை மூலம் கர்ப்பப்பை தடிப்பை அளந்து அதற்கேற்ப அடுத்த கட்ட பரிசோதனையோ கர்ப்பப்பை அகற்றலோ செய்து இதற்கு முடிவு காண்கின்றோம். சிகிச்சைகளிலும் சரி புற்றுநோயை குணப்படுத்துவதிலும் சரி வெற்றி கண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினாலும் சுற்றத்தார் சூழவுள்ளோரும் பல பல அபிப்பிராயங்களை பலவந்தமாக திணித்து மனரீதியில் சோர்வடையச் செய்கின்றனர்.
அதாவது மருத்துவ ரீதியில் செய்ய வேண்டியவற்றை செய்து பாதிக்கப்பட்ட பெண்களை திடப்படுத்தினாலும் சிலரது அபிப்பிராயங்கள் கேட்டு மனச்சோர்வும் நிம்மதியற்ற தன்மையும் ஏற்படத்தான் செய்கின்றது. எனவே சுற்றத்தாரையும் சூழவுள்ளோரையும் நாம் கேட்டுக் கொள்வது நோயில் பாதிக்கப்பட்டவர்களையும் சிகிச்சைகளில் உள்ளவர்களையும் மனம் புண்படாத அளவோடு பேசி அவர்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கையூட்ட வேண்டும் என்பதே.
மருத்துவ ஆலோசனைப் படி கேட்பதா அல்லது உங்களது அபிப்பிராயங்களின் படி நடப்பதா என்ற ஒரு தர்ம சங்கட நிலமையை ஏற்படுத்தாதவாறு நடக்க வேண்டிய பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
எனவே மெனோபாஸ் பருவத்தில் மாதவிடாய் நிரந்தரமாக நிற்க வேண்டும். இவ்வாறு நின்று மீண்டும் ஆரம்பித்தால் இதனை அலட்சியப்படுத்தாது வைத்திய ஆலோசனை பெறவேண்டும். நோய் என்று கண்டறிந்தாலும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் வெற்றிகரமான சிகிச்சையில் புற்று நோயாகக் கூட இருந்தாலும் வெற்றி கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM