யாழில் போதைப்பொருளை கட்டுப்படுத்த கல்வித் திணைக்களத்தின் ஒத்துழைப்பு போதாது - வைத்திய நிபுணர் வினோதா

Published By: Digital Desk 5

26 Nov, 2022 | 10:08 AM
image

யாழில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு கல்வித்திணைக்களம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய நிபுணர் அ.வினோதா தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் கட்டுப்படுத்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனை தொடர்பில் பல கூட்டங்கள் இடம் பெறுகின்ற போதிலும் அந்த கூட்டங்களுக்கு கல்வி திணைக்கள அதிகாரிகள் வருவதில்லை. 

அதே போல் பாடசாலைகளில் இருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கின்றன. ஆனால் அந்த முறைப்பாடுகளுக்குரிய நடவடிக்கைகளை கல்வித் திணைக்களத்தினர் எடுக்கப்படுவதில்லை.

பாடசாலை மட்டங்களில் இடம்பெறும் போதைப்பொருள் செயற்பாடுகளுக்கு கல்வி திணைக்களத்தினர் கட்டாயமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேபோல் வழமையாக மாவட்ட செயலக கூட்டங்களுக்கு கூட அதிகாரிகள் வருவதில்லை. ஆனால் இன்றைய கூட்டத்திற்கு கல்வி திணைக்கள அதிகாரிகள் வந்துள்ளார்கள். அது வரவேற்கக்கப்பட வேண்டிய விடயம்.

குறிப்பாக பாடசாலை மட்டங்களில் போதைப்பொருள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கல்வித் திணைக்களம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் அந்த கல்வித் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. எனவே போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு கல்வி அதிகாரிகள் கட்டாயமாக ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே பாடசாலை மட்டங்களில் உள்ள போதைப்பொருள் விடயங்களை கட்டுப்படுத்த முடியும்.

குறிப்பாக பாடசாலை மட்டங்களில் நடவடிக்கை எடுப்பதற்கு கல்வித்திணைக்களம் தடையாக உள்ளமை தொடர்பிலும் பலமுறைபாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. எனவே இது குறித்து கல்வி திணைக்கள உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51