கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற நெதர்லாந்து, ஈக்வடோர் அணிகளுக்கு இடையிலான போட்டி 1:1 கோல் விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்தது.
குழு ஏ அணிகளுக்கு இடையிலான இப்போட்டி, கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள கலீபா சர்வதேச அரங்கில் நடைபெற்றது.
போட்டியின் 6 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கொடி கெப்கோ கோல் புகுத்தினார். கத்தார் 2022 சுற்றுப்போட்டியில் இதுவரை ஆட்டமொன்று ஆரம்பிக்கப்பட்ட மிக சொற்ப வேளையில் வேகமாக அடிக்கப்பட்ட கோல் இதுவாகும்.
எனினும், பின்னர் ஈக்வடோர் அணி நெதர்லாந்துக்கு கடும் சவாலை ஏற்படுத்தியது. அதன்பின் கூடுதலான நேரம் ஈக்வடோர் அணியை பந்தை தம்வசம் வைத்திருந்தது.
இடைவேளைக்கு சற்று முன் ஈக்வடோர் வீரர் பேர்விஸ் எஸ்துபினன் அடித்த பந்து கோல் கம்பத்தக்குள் புகுந்தது. எனினும், ஈக்வடோர் வீரர் ஜக்சன் பொரோஸோ ஓவ் சைட்டில் நின்றிருந்ததால் அந்த கோல் அனுமதிக்கப்படவில்லை.
இடைவேளையின்போது நெதர்லாந்து 1:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது.
எனினும் இடைவேளையின் பின்னர் 49 ஆவது நிமிடத்தில் ஈக்வடோர் வீரர் என்னேர் வலன்சியா கோல் புகுத்தி, கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.
இச்சுற்றுப்போட்டியில் வலன்சியா புகுத்திய 3 ஆவது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது. கத்தார் அணியுடனான போட்டியில் அவர் 2 கோல்களை புகுத்தியிருந்தார்.
இறுதியில் நெதர்லாந்து - ஈக்வடோர் போட்டி 1:1 கோல் விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM