தயாரிப்பு: பிரின்ஸ் பிக்சர்ஸ்
நடிகர்கள்: சசிகுமார், பார்வதி அருண், ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகி நீடு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர்
இயக்கம்: ஹேமந்த்
மதிப்பீடு: 3/5
சக மனிதர்கள் இடையேயான அன்பு பகிர்தலை மனிதர்களுடன் இயற்கை முறையிலான சுழற்சியில் இருக்கும் விலங்குகள் மீதும் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதனை வலிமையுடன் உணர்த்தியிருக்கும் கதை தான் 'காரி'.
தமிழர்களின் வீரம் செறிந்த பாரம்பரிய கலாசார விளையாட்டான ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு என போற்றப்படும் விளையாட்டு, மனிதர்களுக்கும் விலங்குகளான காளை மாடுகளுக்கும் இடையேயான உணர்வு ரீதியிலான உறவின் அடையாளம் என்பதை அடர்த்தியான திரைக்கதையின் மூலம் உணர்த்தியிருக்கும் திரைப்படம் தான் 'காரி'.
கதாநாயகனான சசிகுமார் சென்னையில் பந்தயக் குதிரைகளை லாவகமாக ஓட்டும் வீரராக பணியாற்றுகிறார். இவருடன் ஜீவகாருண்யம் பேசும் தந்தையாக ஆடுகளம் நரேன் வசிக்கிறார்.
தன் மகனை நினைத்து பெருமிதம் கொள்ளும் நரேன், காளை, குதிரை மீது அளவற்ற பாசம் கொண்டிருக்கிறார். தன்னைப் போலவே தனது வாரிசான சசிகுமாரும், மிருகங்கள் மீது அளவற்ற அன்பினை கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்.
ஆனால், சசிகுமார், பந்தய குதிரைகளை விட, சக மனிதர்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கிறார். இதனால் அவர் தந்தையை இழக்கிறார். இது அவருக்குள் பாரிய மன பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த தருணத்தில் சசிக்குமாரின் பூர்வீக கிராமத்திலிருந்து அவருடைய தந்தையின் உறவினர்கள், கிராமத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு உதவி கேட்கிறார்கள். முதலில் மறுக்கும் சசிகுமார், தந்தையின் இழப்புக்கு பின் கிராமத்துக்கு செல்கிறார்.
அங்கு அவர் எதிர்கொள்ளும் பிரச்சினை என்ன? அதற்கான தீர்வினை அவரால் வழங்க முடிந்ததா? இதுவே 'காரி' படத்தின் திரைக்கதை.
சசிகுமார் நன்றாக நடித்திருக்கிறார். அவருடன் வரும் ரெடின் கிங்ஸிலி பேசும் சில வசனங்கள், சிறிய அளவிலான புன்னகையை வரவழைக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை பார்வதி அருண், தான் பாசத்துடன் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையை அவருடைய தந்தை விற்றவுடன், அதை காணாது தவிக்கும் காட்சி, பார்வையாளர்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்கிறது. அந்த காட்சியில் பார்வதி அருணின் நடிப்பு பிரமாதம்.
ஜல்லிக்கட்டு காளை குறித்த சர்வதேச வணிகமும், அதன் பின்னணியில் இயங்கும் வணிக நிறுவனங்கள் குறித்தும் இயக்குநர் விளக்கியிருப்பது சபாஷ். அதே தருணத்தில் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அரசாங்கத்தின் சார்பாக முன்வைக்கப்படும் விடயங்களும் அதன் பின்னணியையும் தெரிவித்திருப்பது கவனம் பெறுகிறது.
ஒளிப்பதிவு, பின்னணியிசை இந்த இரண்டும் இயக்குநருக்கு பலமாக இருக்கின்றன.
அறிமுக இயக்குநர் ஹேமந்த், தமிழக நகரான ராமநாதபுர மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளின் இயல்பையும், அங்கு எம்மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், அப்பகுதி மேம்பாடு அடையும் என்பதையும் விவரித்திருப்பது பாராட்டுக்குரியது.
நாயகன் சசிகுமார் 18 வகையான ஜல்லிக்கட்டு காளைகளில் ஒன்றை கூட அடக்காமல் சாமர்த்தியமாக காட்சிப்படுத்தி இருப்பது பார்வையாளர்களை அதிருப்திக்கு ஆளாக்கி இருக்கிறது.
ஜல்லிக்கட்டு காளைகளில் அபூர்வமான காளையாக கருதப்படும் பரிபூரண கறுப்பு நிறம் கொண்ட 'காரி' எனும் காளையை மட்டும் சசிகுமார் அடக்குவது போல் காட்சிப்படுத்தியிருப்பது பார்வையாளர்களிடையே நகைப்பை உண்டாக்குகிறது. இதனை இயக்குநர் கவனமாக கையாண்டிருக்கலாம்.
காரி - ஜல்லிக்கட்டு கம்பீரம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM