மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை (நவ 24) பிற்பகல் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ஜனாதிபதி ரணிலின் பங்குபற்றலுடன், விசேட நினைவேந்தல் உரை இடம்பெற்றது.
ராஜபக்ஷ ஞாபகார்த்த கல்வி, கலாசார மற்றும் சமூக சேவைகள் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு மகா விகாரையின் இலங்கை ராமன்ய மஹா நிகாயாவின் அனுநாயக்க மினுவாங்கொட பத்தடுவன பிக்கு பயிற்சி நிலையத்தின் நெதகமுவே விஜய மைத்திரி தேரர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மலேசியாவின் கோலாலம்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமித ஹெட்டிகே, 'ஒரே திசை ஒரே பாதை நிலை பேண்தகு அபிவிருத்திக்கான பாடங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து நினைவேந்தல் உரை உள்ளடங்கிய புத்தகம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள டி.ஏ. ராஜபக்ஷவின் சிலைக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM