மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று முல்லைத்தீவு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் இன்று வெள்ளிக்கிழமை (நவ 25) காலை 9 மணி முதல் இரத்ததான முகாம் இடம்பெற்றுள்ளது.
சமூக வலைத்தளம் மூலம் விடுக்கப்பட்ட அறிவித்தலின் அடிப்படையில் தன்னார்வத்தோடு இணைந்த இளைஞர்கள் பலர் இரத்ததான முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் இரத்ததானம் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தபோது இரத்த வங்கிக்கு வருகைதந்த புலனாய்வாளர்கள், தாமும் இரத்தம் வழங்கப்போவதாக பாசாங்கு செய்து, இரத்ததானம் வழங்கிய இளைஞர்களை புகைப்படம் எடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தோடு இரத்ததானம் தொடர்பில் கார்த்திகைப்பூ பொறித்த இலட்சனை ஒன்றினை தமது ஆடையில் அணிந்தவாறு இரத்ததான முகாமில் பங்கேற்ற இளைஞர்களை அங்கு வந்த பொலிஸார் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM