(க.கிஷாந்தன்)
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை, கெலிவத்தை, திம்புள்ள ஆகிய தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த 300ற்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அங்கத்தவர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இன்று உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளனர்.
தமக்கான காணி பிரச்சினை, வீட்டு பிரச்சினை உள்ளிட்ட ஏனைய அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக தீர்த்துக் கொள்வதற்காக ஒருமுகப்பட்ட ரீதியில் இத் தோட்ட தொழிலாளர்கள் தாம் இதுவரை அங்கம் வகித்த கட்சிகளிலிருந்து விலகி தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று காலை போகாவத்தை கலாசார மண்டபத்தில் அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் , தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் உட்பட புதிய அங்கத்தவர்களாக இணைந்துக் கொள்ளும் தொழிலாளர்களுடன் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இதன்போதே 300 புதியஅங்கத்தவர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு ஆதரவினை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM