கண்டி, நுவரெலியா மாவட்டங்களை சேர்ந்த பின்தங்கிய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை இலவசமாக வழங்கும் திட்டமொன்றை ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் நலன்புரிச் சங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
அதன் முதற்கட்ட பணி எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளதோடு, வருடந்தோறும் மேற்கொள்ளப்படும் என ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளரும், மேற்படி நலன்புரி அமைப்பின் தலைவருமான கலாநிதி ஜனக லிந்தர தெரிவித்துள்ளார்.
பேராதனையிலுள்ள ஏற்றுமதி விவசாய திணைக்களத்தில் நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
‘அக்குறட சவிய’ (எழுத்துக்கு சக்தி) என்றழைக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், பாடப்புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், எழுது கருவிகள் மற்றும் பாதணிகள் போன்ற பாடசாலை கல்விக்குத் தேவையான பல பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களை சேர்ந்த பின்தங்கிய பிரதேச பாடசாலைகளை சேர்ந்த குறைவருமானம் கொண்ட குடும்பங்களில் இருந்து இதற்காக மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்துக்கு நலன் விரும்பிகளிடமிருந்து நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM