திருகோணமலை பட்டணமும் சூழலும்பிரிவு பிரதேச சபையின் சமூக பிரதிகளுக்கான செயற்றிட்டமுன்மொழிவு தயாரித்தல் தொடர்பான செயலமர்வு சபையின் செயலாளர் திருமதி. நரேந்திரநாத் யாழினி, தலமையில் காலை 9.30மணிக்கு ஆரம்பமாகி நடைபெறுகிறது.
இங்கு வளவாளராக அன்பழகன் குரூஸ் கலந்து கொண்டு நெறிப்படுத்துகின்றார்.
இந்நிகழ்வு தொடர்ந்து நாளையும் நடைபெறவுள்ளது. அகத்தின் இணைப்பாளர். பொ. சற்சிவானந்தம் திட்ட விளக்க உரையை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் கதிர்காமநாதன் சிவகுமார், கிருஸ்ணபிள்ளை தயானந்தன் உள்ளூராட்சி உதவி உத்தியோகத்தர், சபையின் உறுப்பினர் சந்திரதாஸ் விபூசனன், யூஸ் எயிட் திட்ட உத்தியோகத்தர்.
திருமதி. சுபத்திராவும் அகத்தின் திட்ட உத்தியோகத்தர் வே. மோகனும் கலந்து கொண்டமை சிறப்பு விடயமாகும்.
சபைகளின் செயலாளர் யாழினி பேசும் போது, அகத்தின் மூலம் பல்வேறு செயற்றிடங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர்களது இந்த திட்ட நடவடிக்கை காரணமாக பிரதேச சபைக்கும் மக்களுக்குமான தொடர்பாடல் அதிகரித்துள்ளது.
மட்டுமன்றி மக்களுக்கும் சபைக்கும் இடையில் இருந்த இடைவெளி குறைந்துள்ளதை உணர்கின்றோம். எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திய அகம் நிறுவன முகாமைக்கு எமது மேலான நன்றிகளை தெரிவிக்கின்றோம் எனத்தெரிவித்தார்.
இதேகருத்தை உள்ளூராட்சி உதவி உத்தியோகத்தர் திரு. தயானந்தனும் தனது வரவேற்புரையில் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான திட்ட நடவடிக்கை 5 பிரதேச சபை களில் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அகத்தின் இணைப்பாளர் பொ. சற்சிவானந்தம் தெரிவுத்தார்.
பிரதேச சபையின் நடவடிக்கை களில்மக்களின்பங்களிப்பை அதிகரிக்கும் நோக்குடன் உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM