சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,943 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த சில நாட்களாக கொவிட் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அங்கு 31,656 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இது கடந்த பல மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு எண்ணிக்கை ஆகும்.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. புதிதாக 32,943 பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதில் 3,103 பேருக்கு அறிகுறிகள் உள்ளன. 29,840 பேருக்கு எந்தவித கொரோனா அறிகுறிகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்புகள் எதுவும் இல்லை.
சீனாவில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருவது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இதுவரை கொவிட் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,232 ஆகும். மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை 300,619 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM