( எம்.எப்.எம்.பஸீர்)
சட்ட விரோதமாக ரீ 56 ரக துப்பாக்கி மற்றும் ரிவோல்வர் ஒன்றினை உடன் வைத்திருந்தமை தொடர்பில், பிரபல போதைப் பொருள் வர்த்தகர் என அறியப்படும் கம்பொல விதானகே சமந்த குமார எனும் வெலே சுதாவுக்கு எதிராக சட்ட மா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கின் முன் விளக்க மாநாட்டுக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி குறித்த வழக்கின் முன் விளக்க மாநாடு இடம்பெறும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று ( 23) அறிவித்தார்.
அதன்படி குறித்த தினம் விசாரணை அதிகாரியான பொரலஸ்கமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் மன்றில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் பொரளை பகுதியில் குறித்த ஆயுதங்களை உடன் வைத்திருந்தமை தொடர்பில், மற்றொரு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM