(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)
பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியில் அழைத்த ‘சேர்’ சட்ட ஒழுங்கு அமைச்சரா? பிரதமரா என்பது அநுர திஸாநாயக்கவின் கற்பனையாகும். ‘சேர்’ என்பது அவருடைய பாடசாலை ஆசிரியராக இருக்கலாம். நான் கூட எனது ஆசிரியரை ‘சேர்’ என்றே இப்போதும் அழைக்கிறேன் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க எழும்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் பிரகாரம் பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு விடுத்த ‘சேர்’ சட்டம் ஒழுங்கு அமைச்சரா? அல்லது பிரதமரா? என்பதனை அமைச்சர் சபையில் அறிவிக்க வேண்டும் என்றார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல எழுந்து பேசுகையில்,
பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பு விடுத்த ‘சேர்’ சட்டம் ஒழுங்கு அமைச்சரா? பிரதமரா? என்பது ஜே.வி.பி. தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் கற்பனையாகும்.
பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பு விடுத்த ‘சேர்’ அவரது பாடசாலை ஆசிரியராக இருக்கலாம். நான் கூட எனது ஆசிரியரை இன்னும் கூட சேர் என்றே அழைக்கிறேன் என்றார்.
இதன்போது சபையில் இருந்த எம்.பி.க்கள் சிரித்தும் கிண்டலாக கோஷமும் எழுப்பினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM