சமூகத்தின் பிரச்சினைகளையும், கூடாத பழக்கங்களையும் மக்களுக்கு எடுத்துரைத்து சமூக மாற்றத்தை நோக்கி சாய்ந்தமருது கலைஞர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள ‘சமூக விழிப்புணர்வு குறுந்திரைப்படம்’ எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய மண்டபத்தில் திரையிடப்படவுள்ளது.
இளம் இயக்குனர் எல்.எம். சாஜித் இயக்கத்தில் டொப் குயின் அட்வர்டைசிங் நிறுவன தயாரிப்பில் பிரபல கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானாவின் பிரதான நடிப்பில் வெளிவரவுள்ள இந்த நாடகங்கள் முதல் தொழுகை, பணத்திமிரு, பெண்தேவதை, குடிபோதை, வட்டியின் வினை போன்ற சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டு திரையிடப்படவுள்ளது. இந்த நாடகங்களில் பிரபல கலைஞர்களான எம். எச். எம். அலிரஜாய், ஐ. ஜாபீர், இபாஸ் ஹஸ்னி, சுல்பிகா செரீப், எம். ஐ. எம். அக்ரம், ஏ. ஆதம்பாபா, ஜே. முஸ்னத் அஹமட், பாத்திமா அன்ஹா, என். எம். அலிகான், எம். அல்தாப் போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மருதம் கலைக்கூடல் மன்றம் மற்றும் தெரு பசங்க தயாரிப்பு நிறுவனம் போன்றவற்றின் இணைத்தயாரிப்பில் வெளிவரவுள்ள இந்த சமூக விழிப்புணர்வு குறுந்திரைப்பட வெளியீட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆஷிக், கிழக்கு மாகாண கலாச்சார உத்தியோகத்தர் ஏ. எல். எம். தௌபீக், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஆர். எம். ரிம்ஸான், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர், சாய்ந்தமருது பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்களான ஏ. எச். சபிக்கா, யுகே. எம். ரிம்ஸான், அமானா நற்பணிமன்ற தலைவர் ஏ. எல். ஏ. பரீட், சமூக நல்லிணக்க பேரவை தலைவர் எம்.எச்.எம். இப்ராஹிம், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி என்.ஏ.அஸாம் உட்பட கலைஞர்கள், பிரதேச முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM