இசையுலகில் பெரும் வரவேற்பை பெற்றுவரும் சுயாதீன பாடல்களின் வரிசையில் பொலிவுட் நடிகை ஆஷ்னா சாவேரி நடிப்பில் அமைந்துள்ள 'உச்சிமலை காத்தவராயன்...' எனும் பாடலின் காணொளி வெளியாகி சாதனை படைத்து வருகிறது.
பி ரெடி பிலிம்ஸ் சார்பில் ஆனிவி இந்த பாடலை எழுதி இசையமைத்துள்ளார். இசையமைப்பாளரும் பாடகருமான ஜெஸ்ஸி கிப்ட்டுடன் ஆனிவியும் பாடலை பாடியிருக்கிறார்.
''பின்னால வந்த எவனும் வெளங்குனதில்ல..." என தொடங்கும் இந்த பாடலில் நடிகர்கள் மா.கா.பா. ஆனந்த், ஆர்.ஜே. விஜய், நடிகை ஆஷ்னா சாவேரி ஆகியோர் நடனமாடியுள்ளனர்.
இந்த பாடலை டோங்கிலி ஜம்போ இயக்கியிருக்கிறார். பாடலுக்கான நடனத்தை நடன இயக்குநர் சாண்டி அமைக்க, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
துள்ளலிசையில் அமைந்திருக்கும் இந்த பாடலில் மா.கா.பா ஆனந்த், ஆர்.ஜே. விஜய், ஆஷ்னா சாவேரி மூவரின் தோற்றமும் நடனமும் பாடலும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது. இதனால், இந்த பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்துக்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM