(ஏ.என்.ஐ)
உகாண்டாவில் உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய சாலைகள் திட்டத்தை நிறைவுக்கு கொண்டுவர சீன நிறுவனம் மேலதிகமாக கால அவகாசம் கோரியுள்ளது.
ஏழு சாலைகளில் லகிடி சாலை, பிலிப் அடோங்கா சாலை, ஜனனி லூம் சாலை, கிட்கம் சாலை, டாம் அபிலா மற்றும் ஒனேகா சாலைகள் அனைத்தும் உகாண்டாவில் மத்திய பிரிவில் அமைந்துள்ளன.
இந்நிலையில் இந்த சாலைத் திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனம் 18 மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் உகாண்டா நகரசபை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் நிதியுதவியின் கீழ் இந்த சாலைகள் அமைக்கப்பட்டன.
கடந்த மார்ச் மாதத்தில் சீன நிறுவனம் பல பில்லியன் செலவில் சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்தது.
கிட்கம் நகராட்சி மேம்பாட்டு மன்றத்தின் தலைவர் தோமஸ் ஒகெடயோட்வினால் எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதிக்குள் பணிகளை முடிக்க எச்சரிக்கையுடன் இவ்வருடம் கடந்த செப்டெம்பரில் உள்ளூராட்சி அமைச்சகத்தால் ஒப்பந்தக்காரருக்கு நான்கு மாத ஒப்பந்த நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் காலக்கெடுவை முறியடிக்க கிட்கம் நகராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து நிறைவுசெய்ய முடியாது என அவர் குறிப்பிட்டார்.
2019ஆம் ஆண்டில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் உலக வங்கி நிதியுதவித் திட்டத்தில் பயனடையத் தொடங்கிய எட்டு புதிய நகராட்சிகளில் கிட்கம் நகராட்சியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM