(நெவில் அன்தனி)
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அல் ஜனூப் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற டி குழுவுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் பிரான்ஸ் 4 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது.
அப் போட்டியில் 2 கோல்களைப் போட்ட ஒலிவர் கிரூட், பிரான்ஸ் சார்பாக அதிக சர்வதேச கோல்களைப் போட்ட வீரர்கள் பட்டியலில் முதலிடத்தல் இருக்கும் தியரி ஹென்றியின் சாதனையை சமப்படுத்தினார்.
எனினும் அப் போட்டியில் அவுஸ்திரேலியா முதல் கோலைப் போட்டு பிரான்ஸை அசத்தியது.
மெத்யூ லெக்கி பரிமாறிய பந்தை க்ரெய்க் குட்வின் இலகுவாக கோலினுள் புகுத்தி 9ஆவது நிமிடத்தில் அவுஸ்திரெலியாவை முன்னிலையில் இட்டார்.
இந்த கோலினால் அதிர்ச்சி அடைந்த பிரான்ஸ், கோல் நிலையை சமப்படுத்த கடுமையாக போராடியது. இதன் பலனாக போட்டியின் 27ஆவது நிமிடத்தில் தியோ ஹேர்னெண்டெஸ் பரிமாறிய பந்தை பெனல்டி எல்லைக்குள் இருந்தவாறு ஏட்றியன் ரேபியட் தலையால் முட்டி கோல் நிலையை சமப்படுத்தினார்.
5 நிமிடங்கள் கழித்து ஏட்றியன் ரேபியட் பரிமாறிய பந்தை ஒலிவர் கிரூட் கோலாக்கி பிரான்ஸை முன்னிலையில் இட்டார். (2-1)
அதன் பின்னர் இடைவேளைவரை 5 கோல் போடும் முயற்சிகளை பிரான்ஸும் ஒரு கோல் போடும் முயற்சியை அவுஸ்திரேலியாவும் தவறவிட்டன.
இடைவேளையின் போது பிரான்ஸ் 2 - 1 என முன்னிலையில் இருந்தது.
இடைவேளைக்குப் பின்னர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் கோல் போடுவதற்கு எடுத்த பல முயற்சிகள் இலக்கு தவறின.
போட்டியின் 66ஆவது நிமிடத்தில் உஸ்மான் டேம்பேல் பரிமாறிய பந்தை கிலியான் எம்பாப் தலையால் முட்டி பிரான்ஸின் 3ஆவது கோலை போட்டார்.
அடுத்த 3ஆவது நிமிடத்தில் கிலியான் எம்பாப் பரிமறிய பந்தை கோலாக்கிய ஒலிவர் கிரூட் தனது சர்வதேச கோல் எண்ணிக்கையை 52ஆக உயர்த்தி தியெரி ஹென்றியின் பிரான்ஸுக்கான சாதனையை சமப்படுத்தினார்.
போட்டியின் கடைசிக் கட்டத்தில் பிரான்ஸின் 2 கோல் போடும் முயற்சிகள் கைகூடாமல்போனது.
பின்கள வீரர் லூக்கஸ் ஹேர்னண்டஸ் உபாதையினால் உலகக் கிண்ணத்திலிருந்த வெளியேறினார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது முழங்காலில் கடும் உபாதைக்குள்ளான பிரான்ஸ் அணியின் சிரேஷ்ட பின்கள வீரர் லூக்கஸ் ஹேர்னண்டஸ் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து வெளியேறினார்.
ஏற்கனவே கடந்த சனிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பிரான்ஸின் அதிசிறந்த வீரர் கரிம் பென்ஸிமா உபாதைக்குள்ளாகி உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து வெளியேறியிருந்தார்.
போல் பொக்பா, எங்கோலோ கன்டே, ப்ரெஸ்னெல் கிம்ப்பெம்ப் ஆகியோரும் உபாதைக்குள்ளானதால் பிரான்ஸ் குழாத்தில் இடம்பெறவில்லை. இவை அனைத்தும் பயிற்றுநர் டிடியர் டெஸ்சாம்ப்ஸுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்த போதிலும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி ஆறுதல் அளித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM