கடந்தவாரம் கொழும்பில் இடம்பெற்ற உலகப் புகழ் பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் (Enrique Iglesias) கலந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு தாம் வருந்துவதாக முன்னாள் கிரிக்கட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதனைக் காண வந்தவர்களுடைய பணத்தை மீளவழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்களுடைய உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த இசை நிகழ்ச்சியின் போது 5000 முதல் 50இ000 வரை டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டனஇ உள்ளே நுளைவுச் சீட்டுக்களின்விலைக்கமைய மதுப்பானம் வழங்கப்பட்டுள்ளதோடு அநாகரிகமான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
குறித்த இந்த நிகழ்ச்சியை இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரின் ‘Live Events’ என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்ச்சி நடத்தப்பட்ட விதம் தொடர்பில் நாடு முழுவதும் மற்றும் சமூகவலைதளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்ச்சியை காணச்சென்ற பெண்ணொருவர், பாடகரின் மீது தனது உள்ளாடைகளை கழற்றி அவர் மீது வீசியுள்ளார்.
இதன்பின்னர் இவ்வாறான ஒழுக்கக்கேடான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு அனுமதியளிக்கப்போவதில்லையெனவும் இந்நிகழ்ச்சி தொடர்பில் ஜனாதிபதி கடுமையாக விமர்சித்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM