நுவரெலியாவில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தமது பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை இன்று செவ்வாய்க்கிழமை மதியத்துடன் கைவிட்டுள்ளனர்.
நுவரெலியா பஸ் சாரதிகள் , நடத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை மாலை 3 மணி முதல் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து இருந்தனர்.
தூர பிரதேசங்களில் இருந்து இயக்கப்படும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் நுவரெலியா பிரதானபஸ் தரிப்பிடத்திற்குள் உள்ளே நிறுத்தப்படாமல் நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் பஸ் நிறுத்துவதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட மேலதிக செயலாளர் மற்றும் நுவரெலியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட தனியார் பஸ் சங்க உறுப்பினர்கள் மற்றும் இ.போ.ச பஸ் காரியாலய அதிகாரிகள் இணைந்து விசேட கலந்துரையாடல் ஒன்று தலைமை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
இதன்போது தூரப்பிரதேசங்களில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் நுவரெலியா பிரதான பஸ் நிலையத்துக்குள் ஐந்து நிமிடம் மாத்திரம் நிறுத்துவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ் போக்குவரத்து சம்பந்தமான மேலதிக தீர்மானங்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறும் விசேட கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்தனர் இதன் பின்னர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நுவரெலியா பஸ் சாரதிகள் நடத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் இவ் போராட்டத்தினை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM