அமெரிக்காவும் மேற்குலகமும் ஈரான் பிரச்சினையில் தலையிடுகின்றன என இலங்கைக்கான ஈரான் தூதுவர்ஹாஷேம் அஷ்ஜஜாதே தெரிவித்துள்ளார்.பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கேள்வி - அரச கட்டிடங்களை தாக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்ப்பவர்களை தாக்குமாறும்; ஆர்ப்பாட்டக்காரர்களை நாடொன்றின் முகவர்கள் வழிநடத்துகின்றார்களா ? உங்களால் இதனை தெளிவுபடுத்த முடியுமா?
பதில்- அமினியின் துரதிஸ்டவசமான மரணத்தை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் இடம்பெற்றன.ஆனால் சில பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன, பதட்டத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தின.இந்த சம்பவங்கள் முன்னாள் பிரதமர் மொசெடக்கின் அரசாங்கத்தை கவிழ்த்த பதவி கவிழ்ப்பிற்கு முன்னர் அமெரிக்காவின் சிஐஏயின் தூண்டுதலால் இடம்பெற்ற சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன.
எங்களிற்கு கிடைக்கின்ற விபரங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது அமெரிக்காவே இந்த வன்முறைகளை தூண்டுகின்றது என நான் உறுதியாக நம்புகின்றேன்.ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு ஆதரவளிப்பதன் மூலம் அமெரிக்காவும் ஏனைய சில நாடுகளும் ஈரானின் உள்விவகாரங்களில் மீண்டும் தலையிட ஆரம்பித்துள்ளன.
ஏனைய வெளிநாட்டு சக்திகளான வெளிநாடுகளின் அனுசரணையுடன் செயற்படும் பயங்கரவாத குழுக்களும் தங்கள் முகவர்களை தனிநபர்களை வன்முறை குழப்பங்களில் ஈடுபடுமாறு தூண்டுகின்றன.
பார்சி மொழியில் இயங்கும் இணையத்தளங்களும் தொலைக்காட்சி நிலையங்களும் இளையவர்களையும் ஏனையவர்களையும் வன்முறையில் ஈடுபடுமாறு தூண்டுகின்றன.
கலவரங்கள் வன்முறைகளாக மாறிய ஆர்ப்பாட்டங்களின் போது பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புள்ள சில நபர்களும் ஊடகங்களின் ஒரு பகுதியினரும் வன்முறைகளின் ஈடுபட்டதுடன் பொது தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினார்கள்,மக்களை வன்முறைகளிற்கு தூண்டுவதன் மூலம் பொலிஸாருக்கு எதிராகவும் வன்முறைகளை தூண்டினார்கள்.
சில சந்தர்ப்பங்களில் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி அவர்களிற்கு வழங்கப்பட்டது.
கேள்வி - பார்சி மொழியில் இயங்கும் சில வெளிநாட்டு செய்தி வலையமைப்புகளும் இணையத்தளங்களும் இளைஞர்களை தூண்டிவிடுவதாக நீங்கள் குற்றம்சாட்டியுள்ளீர்கள் - இவை என தெரிவிக்க முடியுமா?
பதில்- பிபிசி பேர்சியன் ஈரான் இன்டநசனல் மனோட்டோ போன்றன சில
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM