(எம்.மனோசித்ரா)
தொழிலாளர்களை சிரமங்களுக்கு உள்ளாக்கும் வகையிலும் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையிலும் ஆகரபத்தனை தோட்ட கம்பனி செயற்படுவதால் , பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கையை அறிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள இ.தொ.கா. அலுவலகத்தில் திங்கட்கிழமை (நவ.21) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஊவா மாகாணத்தில் , ஆகரபத்தனை தோட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் கம்பனிக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. குறித்த கம்பனி தொழிலாளர்களை இயன்றவை நஷ்டத்திற்குள்ளாக்கி , அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இது தொடர்பில் இரு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் , அவர்கள் அதற்கு முறையாக பதிலளிக்கவில்லை. இதன் காரணமாக குறித்த தோட்டத்திலிருந்து ஒரு கிராம் தேயிலை கூட வெளிக் கொண்டு செல்லப்படமாட்டாது என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பறிக்கப்படும் கொழுந்து இலைகளுக்கான எடை குறைக்கப்படுகின்றமை , முறையாக உரம் செலுத்தப்படாமை, தோட்டங்கள் காடாகக் காணப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அங்குள்ள தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ளனர். இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே தாம் தொழிற்சங்க நடவடிக்கையை அறிவித்துள்ளோம். மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM