(நெவில் அன்தனி)
பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட 22ஆவது அத்தியாயத்தின் ஏ குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் வரவேற்பு நாடான கத்தாரை 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஈக்வடோர் வெற்றிகொண்டது.
உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் ஆரம்பப் போட்டியில் தோல்வி அடைந்த முதலாவது வரவேற்பு நாடு கத்தார் ஆகும்.
92 வருட உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் இதற்கு முன்னர் வரவேற்பு நாடுகள் 16 வெற்றிகளை ஈட்டியதுடன் 6 போட்டிகளை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டிருந்தன.
தோஹாவிலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள அல் கோர் நகரில் அமைந்துள்ள அல் பெய்த் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு நடைபெற்ற அப் போட்டியின் முதலாவது பகுதியில் அணித் தலைவர் என்னர் வெலென்சியா போட்ட 2 கோல்களே ஈக்வடோரின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
போட்டியின் முதலாவது பகுதியில் ஆதிக்கம் செலுத்திய ஈக்வடோர் சார்பாக 3ஆவது நிமிடத்தில் வெலென்சியா போட்ட கோல், வீடியோ உதவி மத்தியஸ்தரின் மீளாய்வுக்குப் பின்னர் ஓவ் சைட் என மத்தியஸ்தரினால் அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.
எனினும் போட்டியின் 16ஆவது நிமிடத்தில் ஈக்வடோர் அணித் தலைவர் வெலென்சியாவை தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து கத்தார் கோல்காப்பாளர் சாத் அல் ஷீப் முரணான வகையில் வீழ்த்தியதால் ஈக்வடோருக்கு பெனல்டி வழங்கப்பட்டது.
அந்த பெனல்டியை எடுத்த வெலென்சியா மிக லாவகமாக பந்தை வலது கோல் பகுதிக்குள் புகுத்தி ஈக்வடோரின் முதலாவது கோலைப் போட்டார்.
இதன் மூலம் 2022 பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் முதாலவது கோல் பெனல்டி கோலாக அமைந்தது.
15 நிமிடங்கள் கழித்து ஏஞ்சலோ ப்ரெசியாடோ வலது புறத்திலிருந்து உயர்வாக பரிமாறிய பந்தை நோக்கி தாவிய வெலென்சியா தனது தலைவயால் பந்தை முட்டி அலாதியான கோல் போட ஈக்வடோர் 2 - 0 என முன்னிலை பெற்றது.
எனினும் அதன் பின்னர் ஈக்வடோர் கோல் போட எடுத்த முயற்சிகள் கைகூடாமல் போக இடைவேளையின்போது அவ்வணி 2 - 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளையின் பின்னர் வித்தியாசமான அனுகுமுறைகளுடனும் வியூகங்களுடனும் விளையாடிய கத்தாரின் நோக்கம் எல்லாம் மேலதிக கோல்களை எதிரணிக்கு விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதாகவே இருந்தது. அதில் கத்தார் வெற்றியும் கண்டது.
போட்டியின் இரண்டாவது பகுதியில் ஈக்வடோருக்கு கோல் போடுவதற்கு ஓரிரு வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அவற்றை அவ்வணி விரர்கள் முறையாகப் பயன்படுத்த தவறினர்.
அப் போட்டியில் கத்தார் 2 கோல்கள் பின்னிலையில் இருந்ததால் அரங்கில் குழுமியிருந்த அந் நாட்டு இரசிகர்களில் பெரும்பாலானவர்கள் போட்டி முடிவடைவதற்கு முன்னரே ஆசனங்களை காலிபண்ணிவிட்டு வெளியேறிவிட்டனர்.
கத்தார் அணியைச் சேர்ந்த கோல்காப்பாளர் சாத் அல் ஷீப், கே. பௌடியாப், ஏ. அலி, ஏ. அபிப் ஆகியோருக்கும் ஈக்வடோர் அணியைச் செர்ந்த எம். கெல்சீடோ, எஸ். மெண்டெஸ் ஆகியோருக்கும் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.
கத்தார் - ஈக்வடோர் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னர் ஆரம்ப விழா வைபவம் நடைபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM