தீயணைப்பு வாகனத்துடன் விமானம் மோதியதால் இருவர் பலி: பெரு விமான நிலையத்தில் சம்பவம் நாட்டில், விமான நிலைய ஓடு பாதையில் தீயணைப்பு வாகனமொன்றுடன் விமானம் மோதியதால் தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லீமாவில் நேற்றுமுன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றது.
பெருவின் ஜூலியாகா நகரை நோக்கி புறப்படுவதற்காக ஓடுபாதையில் விரைந்து கொண்டிருந்த LATAM நிறுவனத்தின் பிளைட் LA2213 விமானம் இவ்விபத்தில் சிக்கியது. இதன்போது தீயணைப்பு வாகனத்திலிருந்த இருவர் உயிரிழந்தனர்.
எயார்பஸ் ஏ320 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானத்தில் 102 பயணிகள் உட்பட 108 பேர் இருந்தனர். விமானத்திலிருந்தவர்களுக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என மேற்படி விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமனப் பயணிகளில் 20 பேருக்கு ககாயங்களுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக பெரு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை 31 வயதான தீயணைப்பு வீரர் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார் என வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெவித்துள்ளார்.
இவ்விமானத்தின் பின்பகுதி தீயினால் கடுமையாக சேதமடைந்துள்ளது.
ஓடுபாதைக்குள் ஏன் தீயணைப்பு வாகனம் வந்தது என்பது தெரியவில்லை என விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கூறியுள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து, மேற்படி விமான நிலைய செயற்பாடுகள் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை (19) பிற்பகல் 1 மணிவரை இடைநிறுத்தப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM